திங்கள், 12 ஏப்ரல், 2010

ஞாயிறு தினக்குரலில் கிருத்தியம் - யாழ்தேவி திரட்டிக்கும் மனம் நிறைந்த நன்றிகள்!


இலங்கையில் வெளியாகும் பாரிய வாசகர் வட்டத்தைக் கொண்ட 'தினக்குரல்' யாழ்தேவியுடன் கைகோர்க்க முன்வந்துள்ளது. இனி ஒவ்வொரு ஞாயிறு தினக்குரலிலும் யாழ்தேவிக்கான பக்கத்தில் எங்கள் பதிவர்களின் பதிவுகள் மின்னப்போகின்றன.

இந்தச் செய்திக்கமைவாக - நேற்றைய(11.04.2010) தினக்குரல் வாரவெளியீட்டில் இந்த வார நட்சத்திரமாக எனது கிருத்தியம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தினக்குரலுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் என்னை தமது திரட்டியில் (07.09.2009) நட்சத்திரப் பதிவராக்கிய யாழ்தேவியினருக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்! குறிப்பாக யாழ்தேவியின் மருதமூரான் அவர்களுக்கும் - சேரன் அவர்களுக்கும் எனது மறவாத அன்பான நன்றிகள்!

பதிவர் எம்: கே. முருகானந்தன் அவர்களின் மறந்து போகாத சில தளத்தில் 2009 மார்ச் 16ஆந் திகதி யாழ்தேவி பயணம் - ரயிலில் அல்ல என்ற பதிவுக்கு நான் இட்ட கருத்துரை -

உண்மைதான் . நான் எனக்கு யாழ்தேவி இணையம் நட்சத்திரப் பதிவராக ஏற்ற அந்தவாரத்தில் இட்ட ஒரு இடுகை யாழ்தேவி ரயிலைப் பற்றியது - என் வாழ்க்கையில் யாழ்தேவி!

பல நாட்களுக்குப் பின் அந்த இனிமையான அனுபவங்களை மீட்டமைக்கு நன்றிகள். அதில் ஒரு குறிப்பிடப்படாத விடயம் உங்களுடைய வீடியோவில் பார்த்தபிறகுதான் நினைவுக்கு வந்தது!

அனுராதபுரத்திலும் யாழ்ப்பாணத்திலும் நிலத்தின் கீழ் ஒவ்வொரு மேடைகளுக்கும் போகும் வசதியிருந்தது. கொழும்பில் படிகளில் ஏறித்தான் செல்லவேண்டும்.

மற்றது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு செல்லும்போது மதவாச்சி தாண்டி அனுராதபுரத்தை அண்மிக்கும்போது இங்கே நாம் புராதனச் சின்னங்களைப் பார்க்கமுடியும். நானும் 1977க்குப்பின் அனுராதபுரத்தைப் பார்க்க 13 வருடங்கள் ரயிலில் செல்லும்போது அந்த புகையிரத நிலையத்தில் இறங்கி ஒருதடவை எனது காலை வைத்து விளையாடுவது ஞாபகம். ரயில் சேவை யாழ்ப்பாணத்திற்கு இல்லாமல்போனதன்பின் வவுனியா வரை ரயிலில் செல்லும்போது அதிகாலையில் புகையிரதம் அனுராதபுரத்தில் நெடுநேரம் தரித்துநிற்கும் - அப்போதெல்லாம் இறங்கி அங்கு உலாவுவதும் ஓரளவு சிங்களம் தெரிந்ததால் சிலருடன் அளவளாவுவதும் மறக்க முடியாத நிகழ்வுகளே! அருமையான கட்டுரை - வாழ்த்துக்கள்!

செவ்வாய், 2 மார்ச், 2010

தமிழரசுக் கட்சித் தலைவரைக் கொன்று அதே கட்சியில் ஏகப் பிரதிநிதிகளென கொன்றவர்களுக்காகப் போட்டியிட்டால் என்னதான் உருப்படும்? உண்மைகள் செத்துவிடாது!


உண்மைகள் மனிதரைப்போல செத்துவிடாது! யாரும் ஒருபோதும் மறைத்துவைக்கவும் முடியாது – மறைக்கவும் முடியாது. என்றோ ஒரு நாள் அது வெளிவந்தே தீரும்!

ம(மா)க்களுக்கு அது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் என்பதுபோல சிலர் பட்டுத் தெளிவார்கள். ஒரு சிலருக்குப் பட்டும் புத்திவருவதில்லை!

தற்போது தமிழரசுக் கட்சித் தலைவராக இருக்கும் திரு. இரா. சம்பந்தன் அவர்களுக்காக பலர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புகழ்மாலை தொடுக்கிறார்கள். சரி அதை ஏற்றுக்கொண்டாலும் - நியாயம் - உண்மைத் தன்மைகளை ஓரளவுக்காவது இவர்கள் தொட்டுச் செல்வார்கள் என்றால் அங்கு எதையுமே காணவில்லை! இதில் பெரிய நகைச்சுவை என்னவெனில் வெளிநாடு வந்தபின்னர்தான் பலருக்கும் சுதந்திரம் - உரிமை பற்றி அதிகமாகப் பேசவும் எழுதவும் முடிகிறது!

தமிழரசுக் கட்சி 1977 முதல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலக முகவரியைக் கொண்டு அதே தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களை உள்ளடக்கியதாக இயங்கிவந்தது. இதற்கும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. 1977இல் தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்ட சமயம் மறைந்த திரு. குமார் பொன்னம்பலம் அவர்கள் தனக்கு யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதி தரப்படவில்லை என கூட்டணியிலிருந்து பிரிந்துசென்று சுயேட்சையாக யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டபின் அன்றைய ஜனாதிபதி ஜே.ஆரைப் பிடித்து ஒரு மாதிரி தனது அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியை தன்வசம் எடுத்தார். இதனால் தமிழரசுக் கட்சியையும் பத்திரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் தலைவராக திரு. அ. அமிர்தலிங்கம் அவர்களும் அவர்களின் மறைவுக்குப் பின் திரு. அ. தங்கத்துரை தலைமையில் கட்சி பௌத்தலோக மாவத்தையின் முகவரியில் பதியப்பட்டது. இந்தக் கட்சியில் எனது பெயரும் இருந்தது. இப்போது நீக்கப்பட்டிருக்கலாம்.
1994 தேர்தலில் திரு. அ. தங்கத்துரை அவர்கள் வெற்றிபெற்றதைப் பொறுக்கமுடியாத திரு. இரா. சம்பந்தன் அவரைப் படுத்தியபாடு பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் மனச்சாட்சிப்படி இயங்கும் கூட்டணி உறுப்பினர்களுக்கு இது தெளிவாகத் தெரியும். இந்தப் பதவிக்காக அவர் கலாநிதி நீலனையும் இழுத்து ரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த படாதபாடுபட்டார். 3 வருடம் தனக்கு 3 வருடம் தங்கத்தரைக்கு என சம்பந்தர் பதவிக்காக ஒரு கட்டாய ஒப்பந்தத்தை தயார்படுத்தினார். சரியாக 3 வருடத்தில் 05.07.1997இல் பாடசாலைக் கட்டிடத் திறப்பு விழாவில் திரு. அ. தங்கத்துரை கொலைசெய்யப்பட்டார். அவருடன் கூடவே பல கல்விசார் அறிஞர்களும் கொல்லப்பட்டனர். (பதவிக்காக கொலையையும் செய்ய ஏற்பாடு செய்தாரா என்று இப்போது சந்தேகம் எழுகிறது. ஏனெனில் புலிகளை அவர் அதற்காகத்தான் பயன்படுத்தினார்போல எனக்குப் படுகிறது. இது எனது தனிப்பட்ட கருத்து!)
2001 தேர்தலில் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டபின் 05.06.2002இல் மரணமடைந்த தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களின் தேசியப்பட்டியல் நாடாளுமன்றப் பதவிக்கு ஏற்கனவே தேர்தல் திணைக்களத்திற்குப் பெயர் குறிப்பிட்ட திரு. முத்துலிங்கம் அவர்கள் இருக்கத்தக்கதாக தனது மாவட்டத்தில் தோல்வியடைந்த திரு. துரைரட்ணசிங்கத்தை நியமிப்பதற்காக – கட்சித் தலைவரின் உடல் சாம்பலாவதற்கு முன்னரே முகமாலைத் தடுப்புச் சுவரைக்கடந்து புலிகளிடம் ஓடியவர்கள் - சம்பந்தனும் - ஜோசப்பரும் மற்றும் அன்றைய புலிப்பாட்டுப்பாடியவர்கள் அனைவரும்.

கூட்டணித் தலைவரின் பக்கத்தில் அவரது சாம்பல் அள்ளும்வரை ஆரம்ப சகாவான ஆனந்தசங்கரியே பக்கத்திலிருந்தார். இவர்கள் காங்கிரஸிலிருந்து கூட்டணிக்கு வந்தவர்கள்! இன்றுவரை கூட்டணிக்காகவே தம்மை அர்ப்பணித்தவர்கள்.

திரு. தங்கத்துரை அவர்களின் மறைவுக்குப் பின்னர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டவர் திரு. ஆவரங்கால் சின்னத்துரை அவர்கள். இவரது சம்மதம் பெறப்படாமலேயே 2004 தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்த பிரிந்து சென்றவர்கள் தமிழரசுக் கட்சியை கூட்டமைப்பின் கட்சியாக மீள தேர்தலில் பயன்படுத்தினர்.அப்போது புதிய தலைவராக பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களை நியமித்தார்கள். தற்போது இரா. சம்பந்தனுக்கு தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றப் பதவியிலும் சரி - தமிழரசுக் கட்சித் தலைவர் பதவியிலும் சரி அவருக்குப் பிறகுதான் இவர். 1970இல் தங்கத்துரை மூதூர்த் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரானார். 1977இல் இவர் திருகோணமலைத் தொகுதியின் உறுப்பினராமையும் குறிப்பிடத்தக்கது.

கட்சியின் தலைவர்கள் இருவரைக் கொன்றவர்கள் யாரென அகிலமே அறியும்
இவர்கள் தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று சொல்லி பாவம் அஹிம்சையை தன் சிரமேற்கொண்டுவாழ்ந்து எம் தலைவர் ஈழத்தக் காந்தி தந்தை செல்வா - அப்பாவித் தமிழ் மக்களின் குடியுரிமையைப் பறித்தபோது ஏற்படுத்திய ஒரு பலமான அமைப்பை, களவு – கொலை – கடத்தல் போன்ற அநீதிக்குப் பெயர்போன கும்பலுக்காக சம்பந்தன் - மாவை கூட்டுச் செய்த அநியாயத்திற்கு ஆண்டவனின் தண்டனையே இன்றைய நிலை! கடவுள்தான் தமிழரைக் காப்பாற்ற வேண்டும் என்று இவர்களுக்காகத்தான் தந்தை சொன்னாரோ தெரியாது! இவர்கள் - இவர்களோடு தேர்தலில் போட்டியிட்டவர்கள் - இவர்களுக்காக தேர்தலில் வாக்களித்தவர்கள் ஏன் இத்தனைக்கும் மேலாக இவர்களின் ஏகப் பிரதிநிதிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்கள்!
இனிமேலும் இந்தத் தமிழரசுக் கட்சியையும் - அவரது வீட்டுச் சின்னத்தையும் - அவரது அமைதியான பெயரையும் எந்த அநீதியாளரும் சொல்ல அனுமதியில்லை என்பதுடன் இவற்றை மேலும் பயன்படுத்தினால் இதைவிட மேலும் அழிவுகள்தான் எதிர்நோக்க வேண்டி வருமென அவர்களின் ஆத்மாக்களில் நின்று நான் சபதம் செய்கிறேன்!

திங்கள், 1 மார்ச், 2010

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு! பகுதி - 3

சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தனது ஜனாதிபதிப் பதவியை வைத்து 2000 முதல் 2006 வரை இருக்க வேண்டிய பாராளுமன்றத்தை ஒரு வருட காலத்தினுள் கலைத்து புதிதாக ஒரு தேர்தலை நடத்தினார். இது அவருடைய மக்கள் ஐக்கிய முன்னணி அரசுக்கு தோல்வியை ஏற்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னணிக்கு வெற்றியளித்ததுடன் பிரதராக ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியாக சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்கவும் செயற்படவேண்டியிருந்தது. இது ஜனாதிபதி ஆட்சிமுறையை ஏற்படுத்திய ஐ.தே.கட்சிக்கு பெருத்த சவாலாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது.

05.12.2001இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்

ஐக்கிய தேசிய முன்னணி 40,86,026 – 109 ஆசனங்கள்
(Ceylon Workers' Congress, Democratic People's Front, Sri Lanka Muslim Congress, United National Party, Up-Country People's Front)
மக்கள் ஐக்கிய முன்னணி 33,30,815 - 77 ஆசனங்கள்
(Communist Party of Sri Lanka, Desha Vimukthi Janatha Party, Lanka Sama Samaja Party, Mahajana Eksath Peramuna, National Unity Alliance, Sri Lanka Freedom Party , Sri Lanka Mahajana Pakshaya)
ஜே.வி.பி 8,15,353 – 16 ஆசனங்கள்

தமிழர் விடுதலைக் கூட்டணி(கூட்டமைப்பு) 3,48,164 – 15 ஆசனங்கள்
(All Ceylon Tamil Congress, Eelam People's Revolutionary Liberation Front, Tamil Eelam Liberation Organization, Tamil United Liberation Front)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,05,346 – 5 ஆசனங்கள்
ஈபிடிபி – 72,783 - 2 ஆசனங்கள்
சிஹல உறுமய 50,665
புதிய இடதுசாரி முன்னணி 45,901
டி.பி.எல்.எப் 16,669 – 1 ஆசனம்
சுயேட்சை 84,147

இந்தப் பாராளுமன்றமும் 4 ஆண்டுகாலமே ஆட்சியிலிருந்தது.

02.04.2004 இல் நடைபெற்ற தேர்தலில்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 42,23,970 – 105 ஆசனங்கள்
(Communist Party of Sri Lanka, Desha Vimukthi Janatha Party, Janatha Vimukthi Peramuna, Lanka Sama Samaja Party, Mahajana Eksath Peramuna, National Unity Alliance, Sri Lanka Freedom Party)

ஐக்கிய தேசிய முன்னணி 35,04,200 – 82 ஆசனங்கள்
(Ceylon Workers' Congress, Democratic People's Front, Sri Lanka Muslim Congress,
United National Party)

இலங்கைத் தமிழரசுக் கட்சி ((கூட்டமைப்பு) 6,33,654 – 22 ஆசனங்கள்
(All Ceylon Tamil Congress, Eelam People's Revolutionary Liberation Front, Illankai Tamil Arasu Kachchi, Tamil Eelam Liberation Organization)

ஜாதிக ஹெல உறுமய 5,54,076 – 9 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,86,876 – 5 ஆசனங்கள்
மலையக மக்கள் முன்னணி 49,728 – 1 ஆசனம்
ஈபிடிபி – 24,955 - 1 ஆசனம்

இதைவிட இதர கட்சிகள் பெற்ற வாக்குகள்.

Independent lists - 15,865
Jathika Sangwardhena Peramuna - 14,956
United Socialist Party - 14,660
Ceylon Democratic Unity Alliance - 10,736
New Left Front - 8,461
Democratic People's Liberation Front - 7,326
United Muslim People's Alliance- 3,779
United Lalith Front - 3,773
National People's Party - 1,540
Sinhalaye Mahasammatha Bhoomiputra Pakshaya - 1,401
Swarajya - 1,136
Sri Lanka Progressive Front - 814
Ruhunu Janatha Party - 590
Sri Lanka National Front - 493
Liberal Party - 413
Sri Lanka Muslim Katchi - 382
Socialist Equality Party - 159
Democratic United National Front - 141

17.11.2005இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்

மஹிந்த ராஜபக்ஷ 48;,87,152
ரணில் விக்கிரமசிங்க 47,06,366
சிறீதுங்க ஜெயசு10ரிய 35,425
அசோகா சுரவீர 31,238
விக்டர் ஹெற்றிகொட 14,458
சாமில் ஜெயாநெத்தி 9,256
அருண டி சொய்சா 7,685
விமல் கீகானகே 6,639
அனுர டி சில்வா 6,357
அஜித் ஆராச்சிகே 5,082
விஜே டயஸ் 3,500
நெல்சன் பெரேரா 2,525
எச். தர்மத்வாஜா 1,316

26.01.2010இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்

மஹிந்த ராஜபக்ஷ 60,;15,934
சரத் பொன்சேகா 41,73,185
மொஹமட் காசிம் மொஹமட் இஸ்மயில் 39,226
அசால அசோகா சுரவீர 26,266
சன்னா ஜானக சுகத்சிறீ கமகே 23,290
மகிமான் ரஞ்சித் 18,747
சோலமன் அனுர லியனகே 14,220
சரத் மனமேந்திரா 9,684
எம்.கே.சிவாஜிலிங்கம் 9,662
உக்குபண்டா விஜயகோன் 9,381
லால் பெரேரா 9,353
சிறீதுங்க ஜெயசு10ரிய 8,352
விக்கிரமபாகு கருணாரட்ண 7,055
இட்றூஸ் மொஹமட் இல்யாஸ் 6,131
விஜே டயஸ் 3,523
சரத் பின்னடுவ 3,523
மொஹமட் முஸ்தாபா 3,134
பத்தரமுல்ல சீலாரத்ன தேரோ 2,770
சேனாரட்ண டி சில்வா 2,620
அருண டி சொய்சா 2,618
உபாலி சரத் கொன்காககே 2,260
முத்து பண்டார தெமினிமுல்ல 2,007

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு! பகுதி - 2

16.08.1994இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்

மக்கள் ஐக்கிய முன்னணியில் ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி – தேச விமுக்தி ஜனதா கட்சி – லங்கா சமசமாஜக் கட்சி - ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி -ஸ்ரீ லங்கா மகாஜன கட்சி என்ற 5 கட்சிகள் இணைந்தும் - ஐக்கிய தேசியக்கட்சியில் வழமைபோல இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்தும் போட்டியிட்டன. ஜனதா விமுக்தி பெரமுன ஸ்ரீ லங்கா புரோகிரஸிப் புரொன்ற் (Sri Lanka Progressive Front) என்ற கட்சியிலும் போட்டியிட்டது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, ஈ.பி.டி.பி, மலையக மக்கள் முன்னணி(Up-Country Peoples Front), ஈபிஆர்எல்எப் ரெலோ நவசமசமாஜக் கட்சி ஆகியனவும் போட்டியிட்டன.

மக்கள் ஐக்கிய முன்னணி 38,87,823 - 105 ஆசனங்கள
ஐக்கிய தேசியக்கட்சி 34,98,370 - 94 ஆசனங்கள்
ஈ.பி.டி.பி 10,744 – 9 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1,43,307 - 7 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 1,88,593 - 5 ஆசனங்கள்
டி.பி.எல்.எப். 11,567 - 3 ஆசனங்கள்
Sri Lanka Progressive Front 90,078 – 1 ஆசனம்
மலையக மக்கள் முன்னணி 27,374 – 1 ஆசனம்;
சுயேட்சைகள் 141,982

09.11.1994 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி (PA) வெற்றிபெற்றது.

சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க 47,09,205
வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்கா 27,15,285
ஹட்சன் சமரசிங்கா 58,886
டாக்டர். ஹரிச்சந்திர விஜயதுங்கா 32,651
ஏ.ஜே. ரணசிங்கா 22,752
கலப்பத்தி ஆராச்சிகே நிஹால் 22,749


21.12.1999 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி (PA) மீண்டும் வெற்றிபெற்றது.

சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க 43,12,157
ரணில் விக்கிரமசிங்கா 36,02,748
நந்தசேன குணதிலகா 3,44,173
ஹரிச்சந்திர விஜயதுங்கா 35,854
டபிள்யூ.வி.எம்.ரஞ்சித் 27,052
ராஜீவ விஜேசிங்கா 25,085
வாசுதேவ நாணயக்காரா 23,668
தென்னிசன் எதிரிசு10ரியா 21,119
அப்துல் ரசு10ல் 17,359
கமால் கருணாதாச 11,333
ஹட்சன் சமரசிங்கா 7,184
ஆரியவன்ச திசாநாயக்கா 4,039
அல்விஸ் வீரக்கொடி பிரேமவர்த்தனா 3,983

10.10.2000ஆம் ஆண்டு தேர்தலில்

மக்கள் ஐக்கிய முன்னணி (PA) 39,00,901 – 107 ஆசனங்கள்
(Ceylon Workers' Congress, Communist Party of Sri Lanka, Desha Vimukthi Janatha Party, Lanka Sama Samaja Party, Mahajana Eksath Peramuna, Sri Lanka Freedom Party, Sri Lanka Mahajana Pakshaya, Sri Lanka Muslim Congress இந்த 8 கட்சிகளும் மக்கள் ஐக்கிய முன்னணி போட்டியிட்டன)
ஐக்கிய தேசியக்கட்சி 34,77,770 - 89 ஆசனங்கள்
(Democratic Workers' Congress, National Workers' Congress, United National Party ,Up-Country People's Front இந்த 4 கட்சிகளும் ஐ.தே.கட்சியில் போட்டியிட்டன)
ஜனதா விமுக்தி பெரமுன 5,18,774 10 ஆசனங்கள்
National Unity Alliance (Sri Lanka Muslim Congress) 1,97,983 - 4 ஆசனங்கள் சிஹல உறுமய 1,27,863 1 ஆசனம்
தமிழர் விடுதலைக் கூட்டணி 1,06,033 - 5 ஆசனங்கள்
ஈ.பி.டி.பி 50,890 – 4 ஆசனங்கள்
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 27,323 – 1 ஆசனம்
ரெலோ 26,112 - 3 ஆசனங்கள்
சுயேட்சைகள் 2,14,019 1 ஆசனம்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

தேர்தல் திருவிளையாடல்கள் 4 நிறைவேறின! இன்னும் எத்தனையோ?

கடந்த 2004இல் ஏகப்பிரதிநிதிகளுக்காக ஒப்பாரிவைத்த 4 கட்சிக் கூட்டமைப்பு தமக்குள் குத்துச்சண்டைபோட்டு பிரிந்தது ஒரு விளையாட்டு!

மனோ கணேசனை கண்டியில் தேர்தலில் போட்டியிட வரவேண்டாம் என ஆர்ப்பாட்டம் செய்தது இரண்டாவது.

பேரியல் அஷ்ரப் ஆதரவாளர்களை மிரட்டியிருப்பது 3வது.

யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளரை மிரட்டிய அரச கட்சியின் வண்டவாளத்தை பிபிசி வெளிப்படுத்தியதன்மூலம் இன்னோரு விளையாட்டு அம்பலம்.

இப்படி இன்னும் எத்தனை விளையாட்டுக்கள் வரப் போகின்றன.

நடுரோட்டில் நிற்கும் தமிழர்கள் எவரை நம்பி வாக்களிக்கப் போகிறார்களோ?

யாமறியோம் பராபரனே!

1977 முதல் இன்றுவரை தேர்தல்கள் - தமிழ்க்கட்சிகள் ஒரு ஆய்வு!

தமிழ்க்கட்சிகள் இவ்வளவு சோதனைகள் - வேதனைகள் - இழப்புக்கள் - அழிவுகள் - என்பவற்றுக்குப் பின்னும் திரும்பத்திரும்ப சிங்களக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதையும் தமக்குள் தனித்தனியாகப் பிரிந்தும் போட்டியிடுவதைப் பார்த்தால் தலையைக் கொண்டுபோய் எங்காவது சுவரில் மோதவேண்டும் போல இருக்கிறது.

கடந்தகால தேர்தல் முடிவுகளைப் பார்ப்பது இன்றைய காலத்தின் கட்டாயமாகிறது.

1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்

ஐக்கிய தேசியக்கட்சி 31,79,221 – 140 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 4,21,488 – 18 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 18,55,331 – 8 ஆசனங்கள்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் 62,707 – 1 ஆசனம்
லங்கா சமசமாஜக் கட்சி 2,25,317
கம்யூனிஸ்ட் கட்சி 1,23,856
மகாஜன எக்சத் பெரமுன 22,639
சுயேட்சைகள் 3,53,014 – 1 ஆசனம்

ஐக்கிய தேசியக் கட்சி தன்னுடைய பெரும்பான்மை பலத்தைக் கொண்டு நாட்டின் 1972இல் ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சியின் தலைமையில் இருந்த கூட்டணியரசின் அரசிலமைப்பை மாற்றி விபுதியதொரு அரசியல் சாசனத்தை உருவாக்கி அதன்மூலம் – ஜனாதிபதி ஆட்சிமுறையை ஏற்படுத்தியது. பிரதமராயிருந்த ஜே.ஆர் ஜனாதிபதியாகவும் ரணசிங்க பிரேமதாச பிரமராகவும் தெரிவாகினர். மேலும் பாராளுமன்றத்தின் காலத்தை 6 ஆண்டுகளுக்கு மேலதிகமாகத் தொடர்ந்தும் தக்கவைக்க இந்த அரசு சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை 22.12.1982இல் நடத்தியது.

அதில் அரசின் கொள்கைக்கு
சார்பாக 31,41,223 வாக்குகளும்
எதிராக 26,05,983 வாக்குகளும் கிடைத்தன.

ஜனநாயகத்திற்கு முரணாக மக்கள் பாராளுமன்றத் தேர்தலுக்கு வாக்களித்தது 6 ஆண்டுகளுக்கு மட்டுமே என மேலதிகமான 6 ஆண்டுகளை ஏற்காது தமிழர் விடுதலைக் கூட்டணியின் 16 உறுப்பினர்கள் தமது பதவிகளைத் துறந்தார்கள். இவர்களில் இருவர் தேர்தல் முடிந்த சில காலத்திலேயே ஆளும் கட்சியுடன் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருந்தனர். கூட்டணி இல்லாத நிலையில் அடுத்த 6 ஆண்டுகாலம் எதிர்க்கட்சியாகும் வாய்ப்பை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பெற்றது. அன்றைய நாளில் ஐ.தே.கட்சியினால் சுதந்திரக்கட்சித் தலைவி திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்காவின் பாராளுமன்ற உறுப்பினர் உரிமையையும் குடியுரிமையையும் பறிக்கப்பட்டதை நினைவுபடுத்த வேண்டும். அவரது மகன் அனுர பண்டாரநாயக்க எதிர்க்கட்சித் தலைவரானார்.

20.10..1982இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. வெற்றிபெற்று ஜனாதிபதியானார் - ஜே.ஆர்.

ஜே.ஆர் ஜெயவர்த்தனா 34,50,811
ஹெக்டர் கொப்பேகடுவ 25,48,438
றோகண விஜேவீர 2,73,428
குமார் பொன்னம்பலம் 1,73,934
கொல்வின் ஆர்.டி.சில்வா 58,531
வாசுதேவ நாணயக்கார 17,005

19.12.1988இல் 2ஆவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற ஆர். பிரேமதாசா ஜனாதிபதியானார்.

ரணசிங்க பிரேமதாசா 25,69,199
சிறிமாவோ பண்டாரநாயக்கா 22,89,960
ஓஸி அபயகுணசேகர 2,35,719

1989 இல் நடைபெற்ற பாராறுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் இணைந்து ஐ.தே.கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிட்டது. ஐக்கிய சோசலிச முன்னணி என்ற கூட்டில் ஸ்ரீ லங்கா கம்யூனிஸ்ட் கட்சி -லங்கா சம சமாஜக் கட்சி – நவ சமசமாஜக் கட்சி - ஸ்ரீ லங்கா மகாஜன பக்சய என்பன இணைந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசு10ரியன் சின்னத்தில் ஈ.என்.டி.எல்.எப் - ஈ.பி.ஆர்.எல்.எப் - டெலோ – ரி.யூ.எல்.எப். டின்பன இணைந்தும் போட்டியிட்டன. ஈரோஸ் அமைப்பு சுயேட்சையாக போட்டியிட்டது.

ஐக்கிய தேசியக்கட்சி 28,37,961 – 125 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 17,80,599 – 67 ஆசனங்கள்
ஈரோஸ் அமைப்பின் சுயேட்சை 2,29,877 – 13 ஆசனங்கள்
தமிழர் விடுதலைக் கூட்டணி 1,88,593 - 10 ஆசனங்கள்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2,02,014 - 4 ஆசனங்கள்
ஐக்கிய சோசலிச முன்னணி 1,60,271 – 3 ஆசனங்கள்
மகாஜன எக்சத் பெரமுன 95,793 – 3 ஆசனங்கள்
சுயேட்சைகள் 1,01,210

(தொடரும்)

ஆனந்தசங்கரியின் புதல்வர் ஜெயசங்கரி கொழும்பு மாவட்டத்தில் போட்டி!


தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜெயசங்கரி ஆனந்தசங்கரியை தலைமை வேட்பாளராகக் கொண்டு போட்டியிடுகின்றது. இதேவேளை திருகோணமலை, அம்பாறை தவிர்ந்த அனைத்து வடக்கு கிழக்கு மாவட்டங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ் மாவட்டத்தில் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையிலும் வன்னி மாவட்டத்தில் செல்வரட்ணம் சுதாகரன் தலைமையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சோமசுந்தரம் யோகானந்தராஜா தலைமையிலும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.