யாழிலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகை தனது 10ஆவது வயதை முடித்து 11ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கிறது. 11ஆவது வயதில் இணையத்தையும் ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சி!
எனக்கும் வலம்புரிப் பத்திரிகைக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. சில செய்திகளையும் அறிக்கைகளையும் ஏனைய பத்திரிகைகள் பிரசுரிக்காமல் இருந்த வேளையில் நடுநிலை தவறாமல் பிரசுரித்த பெருமை வலம்புரிக்கு மட்டும் உண்டு.
பொது நூலகத் திறப்பு விழாவுக்கு மக்கள் மௌனம் சாதிப்பதை சுட்டிக்காட்டி ஒரு ஆசிரியர் தலையங்கமும் தீட்டியது நினைவு படுத்த வேண்டியுள்ளது.
நடுநிலை தவறா நன்னெறி காக்கும் உங்கள் நாளிதழ் என்பது இதற்குச் சான்றாகும்.
வலம்புரியின் தன்னிகரற்ற நடுநிலைப் பணி ஓங்கட்டும் என்று வாழ்த்துவதில் நான் மன நிறைவடைகிறேன்.
ஆசிரிய பீடத்தினருக்கும் - அதன் அச்சகப் பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறேன்.
உண்மைகள் ஒருபோதும் பொய்யாவதில்லை. பொய்கள் ஒருபோதும் உண்மையாவதில்லை.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக