கடந்த சில தினங்களாக யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம் - சிரிக்கவும் சிந்திக்கவும் மிக அருமையாக இருக்கிறது.
எனக்குப் பிடித்த சிரிப்பான தலையங்கம் அர்ஜூனா பந்தை அடி சுசந்திகா பந்தை ஓடிப்பிடி என்பது 21.02.2010இல் வெளிவந்ததாகும். இதில்
எதிர்வரும் தேர்தலில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த அர்ஜுன ரணதுங்க மற்றும் சனத் ஜெயசூரியா, முத்தையா முரளிதரன் ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்கா ஆகியோர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இவர்கள் வென்றால் அர்ஜுனா, ஜெயசூரியா, முரளி ஆகியோர் பந்தை அடிக்க அதனை சுசந்திகா ஓடிப்பிடிக்க, சபாநாயகர் எழுந்து நின்று நான்கு ஓட்டங்கள், ஆறு ஓட்டங்கள் என்று அறிவிக்க நாடாளுமன்றம் நல்லதொரு விளையாட்டுக் களமாக மாறும் - என்றுள்ளது. முத்தையா முரளிதரன் தான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று பின்னர் அறிவித்ததையும் நினைவுபடுத்த வேண்டும்.
இன்றைய தலையங்கமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஏமாற்றாதீர்கள்
என்பதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களுக்கு சரியானதொரு சவால் விடப்பட்டிருக்கிறது. தள்ளாதவயதில் ஏனோ புலம்புகிறார் போலத் தெரிகிறது. எல்லாம் வரும் 8ஆந்திகதி முடிவுக்கு வரும்.
நேற்றைய தலையங்கத்தில் எல்லாம் சம்பந்தர் மயம் சிவமயத்திற்கு ஏது இடம்? என்பதிலும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்து போனதில் ஆச்சரியப்படுவதற்கு இடமில்லை. ஆனால் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கூட்டமைப்பில் இடம்பெறஇ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் காங்கிரஸில் என்ற உடைவு இருக்கிறதே அடே! அப்பா. இப்படியும் ஒரு தமிழ்ப் பற்று.
போங்கடா சாமி என்று கூறிவிட்டு ஒதுங்கி விடலாம் என்றால்இ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை கனகச்சிதமாக வெளியேற்றிவிட்டு அவரின் இடத்தை பிடித்துக் கொண்ட மகா தந்திரம் இருக்கிறதே ஆண்டவா! இப்படியும் மனிதர்களா? எப்படி எப்படியயல்லாம் காய் நகர்த்தி இருந்த கூட்டை உடைத்து புதிய கூட்டு உருவாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக