
தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஜெயசங்கரி ஆனந்தசங்கரியை தலைமை வேட்பாளராகக் கொண்டு போட்டியிடுகின்றது. இதேவேளை திருகோணமலை, அம்பாறை தவிர்ந்த அனைத்து வடக்கு கிழக்கு மாவட்டங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் தனித்து போட்டியிட வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி யாழ் மாவட்டத்தில் வீரசிங்கம் ஆனந்தசங்கரி தலைமையிலும் வன்னி மாவட்டத்தில் செல்வரட்ணம் சுதாகரன் தலைமையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சோமசுந்தரம் யோகானந்தராஜா தலைமையிலும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக